|
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். |
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. |
அகல உழுகிறதை விட ஆழ உழு. |
அகல் வட்டம் பகல் மழை. |
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. |
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். |
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. |
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? |
அடக்கமே பெண்ணுக்கு அழகு. |
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். |
அடாது செய்தவன் படாது படுவான். |
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். |
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். |
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். |
அடியாத மாடு படியாது. |
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். |
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். |
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. |
அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. |
அந்தி மழை அழுதாலும் விடாது. |
அப்பன் அருமை மாண்டால் தெரியும். |
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. |
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம். |
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். |
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். |
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது. |
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? |
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது. |
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் |
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். |
அளக்கிற நாழி அகவிலை அறியுமா? |
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. |
அறச் செட்டு முழு நட்டம். |
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன். |
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை. |
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான். |
அறமுறுக்கினால் அற்றும் போகும். |
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும். |
அறிய அறியக் கெடுவார் உண்டா? |
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம். |
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். |
அறிவீன இடத்தில் புத்தி கேளாதே. |
அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை. |
அறிவுடையாரை அரசனும் விரும்புவான். |
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும். |
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. |
அற்ப அறிவு அல்லற் கிடம். |
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். |
அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா? |
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம். |
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். |
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? |
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ஆ |
|
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை. |
ஆடையில்லாதவன் அரை மனிதன். |
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. |
ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். |
ஆரால் கேடு, வாயால் கேடு. |
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. |
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. |
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை. |
ஆழமறியாமல் காலை இடாதே. |
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். |
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். |
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு. |
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. |
ஆறின கஞ்சி பழங் கஞ்சி. |
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்? |
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. |
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் |
ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. |
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. |
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன். |
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். |
ஆனைக்கும் அடிசறுக்கும். |
ஆனை படுத்தால் ஆள் மட்டம். |
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. |
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - இ, ஈ |
|
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. |
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான். |
இஞ்சி இலாபம் மஞ்சளில். |
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். |
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு. |
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை. |
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர். |
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது. |
இரக்கப் போனாலும் சிறக்கப் போ. |
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே. |
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே. |
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை. |
இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான். |
இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை? |
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா. |
இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான். |
இருவர் நட்பு ஒருவர் பொறை. |
இல்லாது பிறாவது அள்ளாது குறையாது. |
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா? |
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று. |
இளங்கன்று பயமறியாது. |
இளமையில் கல். |
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து. |
இளமையில் கல்வி சிலையில் எழுத்து. |
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம். |
இறங்கு பொழுதில் மருந்து குடி. |
இறுகினால் களி , இளகினால் கூழ். |
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம். |
இறைக்கிற ஊற்றே சுரக்கும். |
இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே. |
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான். |
ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில். |
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும். |
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். |
ஈர நாவிற்கு எலும்பில்லை. |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - உ, ஊ |
|
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. |
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். |
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா. |
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை. |
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா? |
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. |
உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும். |
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே. |
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல். |
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது. |
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும். |
உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும். |
உதட்டில் உறவு உள்ளத்தில் பகை. |
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். |
உப்பிட்டவரை உள்ளளவும் நினை. |
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? |
உயிர் காப்பான் தோழன். |
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? |
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. |
உலோபிக்கு இரட்டை செலவு. |
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. |
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. |
உளவு இல்லாமல் களவு இல்லை. |
உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல |
உள்ளது போகாது இல்லது வாராது. |
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய. |
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்? |
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. |
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும். |
ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான். |
ஊண் அற்றபோது உடலற்றது. |
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு. |
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை. |
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் |
ஊருடன் ஒட்டி வாழ். |
ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும். |
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - எ, ஏ |
|
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. |
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? |
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு. |
எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே. |
எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன? |
எண் இல்லாதவர் கண் இல்லாதவர், |
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர். |
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். |
எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி. |
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை. |
எண்ணை முந்துதோ திரி முந்துதோ? |
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். |
எதார்த்தவாதி வெகுசன விரோதி. |
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். |
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும். |
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா? |
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம். |
எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா. |
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ? |
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். |
எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும். |
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். |
எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? |
எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே. |
எருது நோய் காக்கைக்குத் தெரியுமா? |
எலி அழுதால் பூனை விடுமா? |
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும். |
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம் |
எலி வளையானாலும் தனி வலை வேண்டும். |
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா? |
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்? |
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? |
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான். |
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம். |
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி. |
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். |
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி. |
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும். |
எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான். |
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு. |
எறும்பு ஊர கல்லுந் தேயும். |
எறும்புந் தன் கையால் எண் சாண். |
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. |
ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை. |
ஏரி நிறைந்தால் கரை கசியும். |
ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும். |
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம். |
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை. |
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும். |
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது. |
ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ஐ, ஒ, ஓ, ஒள |
|
ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு. |
ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா? |
ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். |
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? |
ஒரு காசு பேணின் இரு காசு தேறும். |
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம். |
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? |
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா? |
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை. |
ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா? |
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். |
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய். |
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும். |
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். |
ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை. |
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று. |
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா! |
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. |
ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம். |
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி. |
ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம். |
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு. |
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி. |
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். |
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே. |
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி. |
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு. |
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை. |
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - க |
|
கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா? |
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. |
கடலுக்குக் கரை போடுவார் உண்டா? |
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. |
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது? |
கடல் திடலாகும், திடல் கடலாகும். |
கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? |
கடவுளை நம்பினோர் கைவிடப் படார். |
கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான். |
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி. |
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை. |
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். |
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? |
கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது. |
கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும். |
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும். |
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது. |
கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள். |
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும். |
கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு. |
கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை. |
கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான். |
கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும். |
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும். |
கண் கண்டது கை செய்யும். |
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம். |
கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா? |
கண்டதே காட்சி கொண்டதே கோலம். |
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை. |
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு. |
கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ? |
கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா? |
கதிரவன் சிலரை காயேன் என்குமோ? |
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும். |
கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி. |
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு. |
கரணம் தப்பினால் மரணம். |
கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா? |
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான். |
கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம் |
கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று. |
கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா? |
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். |
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். |
கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி. |
கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே. |
கல்லாதவரே கண்ணில்லாதவர். |
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம். |
கல்வி அழகே அழகு. |
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு. |
கல்விக்கு இருவர், களவுக் கொருவர். |
கல்விக்கு அழகு கசடர மொழிதல். |
கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது. |
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? |
களை பிடுங்காப் பயிர் காற்பயிர். |
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல். |
கள்ள மனம் துள்ளும். |
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம். |
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ! |
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்! |
கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான். |
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது. |
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு. |
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு. |
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா? |
கனிந்த பழம் தானே விழும். |
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு. |
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ. |
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கா |
|
காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும். |
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான். |
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும். |
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும். |
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? |
காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா? |
காணி ஆசை கோடி கேடு. |
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம் |
காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. |
காப்பு சொல்லும் கை மெலிவை. |
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். |
காய்த்த மரம் கல் அடிபடும். |
காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது. |
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி. |
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? |
கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை |
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது. |
காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும். |
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும். |
காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை. |
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும். |
காற்றில்லாமல் தூசி பறக்குமா? |
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள். |
காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கி, கீ, கு, கூ |
|
கிட்டாதாயின் வெட்டென மற. |
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான். |
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? |
கீர்த்தியால் பசி தீருமா? |
கீறி ஆற்றினால் புண் ஆறும். |
குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா? |
குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை. |
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். |
குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும். |
குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா? |
குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும். |
குணத்தை மாற்றக் குருவில்லை. |
குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை. |
குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று. |
குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள். |
குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. |
குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை. |
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும். |
குப்பை உயரும் கோபுரம் தாழும். |
குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன? |
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான். |
குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? |
குரைக்கிற நாய் கடிக்காது. |
குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே |
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி. |
குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது. |
குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது. |
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். |
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. |
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே. |
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா? |
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு. |
குரங்கின் கைப் பூமாலை. |
குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது. |
குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை. |
குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான். |
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. |
கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம். |
கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே? |
கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு. |
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம். |
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கெ, கே |
|
கெடுக்கினும் கல்வி கேடுபடாது. |
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது. |
கெடுவான் கேடு நினைப்பான். |
கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே. |
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும். |
கெட்டும் பட்டணம் சேர். |
கெண்டையைப் போட்டு வராலை இழு. |
கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான். |
கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல. |
கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே. |
கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே? |
கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை. |
கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கை |
|
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. |
கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா. |
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? |
கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள். |
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. |
கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும். |
கையிலே காசு வாயிலே தோசை. |
கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர். |
கையூன்றிக் கரணம் போடவேண்டும். |
கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கொ |
|
கொடிக்கு காய் கனமா? |
கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம். |
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது. |
கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை. |
கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? |
கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு. |
கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான். |
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா? |
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா? |
கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது. |
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கோ |
|
கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை. |
கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு. |
கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது. |
கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு. |
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு. |
கோபம் சண்டாளம். |
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா? |
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா? |
கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்? |
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும் |
கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும். |
கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ச, சா |
|
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். |
சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி. |
சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும். |
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? |
சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன். |
சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும். |
சருகைக் கண்டு தணலஞ்சுமா? |
சர்க்கரை என்றால் தித்திக்குமா? |
சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா? |
சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்? |
சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம். |
சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன். |
சாண் ஏற முழம் சறுக்கிறது. |
சாது மிரண்டால் காடு கொள்ளாது. |
சித்திரமும் கைப்பழக்கம். |
சிறு துரும்பும் பல் குத்த உதவும். |
சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி. |
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - சு, சூ |
|
சுக துக்கம் சுழல் சக்கரம். |
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். |
சுட்ட சட்டி அறியுமா சுவை? |
சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது. |
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா? |
சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம். |
சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும். |
சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு. |
சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே. |
சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை. |
சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி. |
சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா? |
சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும். |
சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான். |
சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது. |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - செ, சே, சை |
|
செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.? |
செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்? |
செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம். |
செய்வன திருந்தச் செய். |
செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும். |
செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? |
செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும். |
சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி. |
சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும். |
சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும். |
சேற்றிலே செந்தாமரை போல. |
சைகை அறியாதவன் சற்றும் அறியான். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - சொ, சோ |
|
சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா? |
சொல் அம்போ வில் அம்போ? |
சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது. |
சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர். |
சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு. |
சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை. |
சொல்வல்லவனை வெல்லல் அரிது. |
சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ். |
சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம். |
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. |
சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா. |
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே. |
சோம்பித் திரியேல். |
சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - த |
|
தங்கம் தரையிலே தவிடு பானையிலே. |
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. |
தடி எடுத்தவன் தண்டல்காரனா ? |
தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன். |
தணிந்த வில்லுத்தான் தைக்கும். |
தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும். |
தண்ணீரையும் தாயையும் பழிக்காதே. |
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும். |
தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி. |
தந்தை தாய் பேண். |
தம்பி உடையான் படைக்கு அஞ்சான். |
தருமம் தலைகாக்கும். |
தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். |
தலை இருக்க வால் ஆடலாமா ? |
தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ? |
தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா? |
தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம். |
தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர். |
தவளை தன் வாயாற் கெடும். |
தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும். |
தனக்கு மிஞ்சித் தான் தருமம் |
தனி மரம் தோப்பாகாது. |
தன் கையே தனக்குதவி. |
தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும். |
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே. |
தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. |
தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு. |
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும். |
தானாடா விட்டாலும் சதையாடும். |
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். |
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது. |
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. |
தேடாது அழிக்கின் பாடாய் முடியும். |
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். |
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ந |
|
நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா? |
நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி. |
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை. |
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா! |
நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது. |
நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும். |
நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும். |
நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான். |
நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ? |
நயத்திலாகிறது பயத்திலாகாது. |
நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும். |
நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம். |
நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை. |
நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும். |
நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது. |
நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ? |
நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும். |
நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும். |
நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம். |
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை. |
நன்மை கடைப்பிடி. |
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நா |
|
நா அசைய நாடு அசையும். |
நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும். |
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும். |
நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம். |
நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு. |
நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை. |
நாய் விற்ற காசு குரைக்குமா? |
நாய் வாலை நிமிர்த்த முடியாது. |
நாலாறு கூடினால் பாலாறு. |
நாள் செய்வது நல்லார் செய்யார். |
நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம். |
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள். |
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நி, நீ |
|
நித்தம் போனால் முத்தம் சலிக்கும். |
நித்திய கண்டம் பூரண ஆயிசு. |
நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு? |
நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். |
நிழலின் அருமை வெயிலில் தெரியும். |
நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர். |
நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும். |
நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம். |
நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது. |
நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும். |
நீர் மேல் எழுத்து போல். |
நீலிக்குக் கண்ணீர் இமையிலே. |
நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நு, நூ, நெ, நே, நை, நொ, நோ |
|
நுணலும் தன் வாயால் கெடும். |
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக. |
நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா? |
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு. |
நூல் கற்றவனே மேலவன். |
நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு. |
நூற்றைக் கெடுத்தது குறுணி. |
நெய் முந்தியோ திரி முந்தியோ. |
நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? |
நெருப்பில்லாமல் புகையாது. |
நெருப்பு என்றால் வாய் வெந்து போமா? |
நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ? |
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும். |
நேற்று உள்ளார் இன்று இல்லை. |
நைடதம் புலவர்க்கு ஒளடதம். |
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. |
நொறுங்கத் தின்றால் நூறு வயது. |
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். |
நோய் கொண்டார் பேய் கொண்டார். |
நோய்க்கு இடம் கொடேல். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ப |
|
பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே. |
பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே. |
பகைவர் உறவு புகை எழு நெருப்பு. |
பக்கச் சொல் பதினாயிரம். |
பசியுள்ளவன் ருசி அறியான். |
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம். |
பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா? |
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ? |
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில். |
படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன். |
படையிருந்தால் அரணில்லை. |
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும். |
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். |
பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில். |
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய். |
பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும். |
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர். |
பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா? |
பணம் பத்தும் செய்யும். |
பணம் உண்டானால் மணம் உண்டு. |
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே. |
பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும். |
பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும். |
பதறாத காரியம் சிதறாது. |
பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது. |
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து. |
பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை. |
பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம். |
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம். |
பருவத்தே பயிர் செய். |
பல துளி பெருவெள்ளம். |
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான். |
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான். |
பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை. |
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும். |
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. |
பழகப் பழகப் பாலும் புளிக்கும். |
பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம். |
பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம். |
பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா? |
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது. |
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா? |
பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை. |
பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ? |
பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர். |
பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும். |
பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி. |
பாம்பின் கால் பாம்பு அறியும். |
பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும். |
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி. |
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன். |
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே. |
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பு, பூ |
|
புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி. |
புத்திமான் பலவான். |
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா? |
புயலுக்குப் பின்னே அமைதி. |
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். |
பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது. |
பூமியைப்போலப் பொறுமை வேண்டும். |
பூ விற்ற காசு மணக்குமா? |
பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம். |
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பெ, பே |
|
பெண் என்றால் பேயும் இரங்கும். |
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு. |
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும். |
பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான். |
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி. |
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும். |
பெருமையும் சிறுமையும் வாயால் வரும். |
பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு. |
பேசப் பேச மாசு அறும். |
பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை. |
பேராசை பெருநட்டம். |
பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ் |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பொ, போ |
|
பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய். |
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை. |
பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது. |
பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார். |
பொறி வென்றவனே அறிவின் குருவாம். |
பொறுமை கடலினும் பெரிது. |
பொறுத்தார் பூமி ஆள்வார். |
பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும். |
பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது. |
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. |
போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா? |
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ம |
|
மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம். |
மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி. |
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? |
மண்டையுள்ள வரை சளி போகாது. |
மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம். |
மத்தளத்திற்கு இரு புறமும் இடி. |
மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல். |
மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு. |
மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும். |
மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான். |
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். |
மருந்தும் விருந்தும் மூன்று வேளை. |
மருந்தே ஆயினும் விருந்தோடு உண். |
மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும். |
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா? |
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும். |
மவுனம் கலக நாசம். |
மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும். |
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. |
மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே. |
மனமுரண்டிற்கு மருந்தில்லை. |
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. |
மனம் உண்டானால் வழி உண்டு. |
மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை. |
மனம் போல வாழ்வு. |
மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி. |
மண்னுயிரைத் தன்னுயிர்போல் நினை. |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மா |
|
மாடம் இடிந்தால் கூடம். |
மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? |
மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா? |
மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது. |
மாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும். |
மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம். |
மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான். |
மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். |
மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை. |
மாரடித்த கூலி மடி மேலே. |
மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி. |
மாரி யல்லது காரியம் இல்லை. |
மாவுக்குத் தக்க பணியாரம். |
மாற்றானுக்கு இடங் கொடேல். |
மானம் பெரிதோ? உயிர் பெரிதோ? |
மானைக் காட்டி மானைப் பிடிப்பார். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மி, மீ, மு, மூ |
|
மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது. |
மின்னுவது எல்லாம் பொன்னல்ல. |
மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ? |
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை. |
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. |
மீதூண் விரும்பேல். |
முகத்துக்கு முகம் கண்ணாடி |
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? |
முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும். |
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா? |
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா |
முதல் கோணல் முற்றுங் கோணல் |
முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார். |
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை. |
முருங்கை பருத்தால் தூணாகுமா? |
முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும். |
முள்ளை முள்ளால் எடு. |
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். |
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது? |
முன் ஏர் போன வழிப் பின் ஏர். |
முன்கை நீண்டால் முழங்கை நீளும். |
முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா? |
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? |
மூத்தோர் சொல் வார்த்தை அமுதம். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மெ, மே, மொ, மோ,மெள |
|
மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை. |
மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும். |
மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம். |
மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும். |
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே. |
மொழி தப்பினவன் வழி தப்பினவன். |
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். |
மெளனம் மலையைச் சாதிக்கும். |
|
|
|
Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - வ, வா, வி |
|
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். |
யானைக்கும் அடி சறுக்கும். |
யானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும். |
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. |
வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும். |
வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது. |
வடக்கே கருத்தால் மழை வரும். |
வட்டி ஆசை முதலுக்கு கேடு. |
வணங்கின முள் பிழைக்கும். |
வரவு எட்டணா செலவு பத்தணா. |
வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு. |
வருந்தினால் வாராதது இல்லை. |
வருமுன் காப்பதறிவு. |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். |
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. |
வளவனாயினும் அளவறிந் தளித்துண். |
வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று. |
வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும். |
வாயுள்ள பிள்ளை பிழைக்கும். |
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு. |
வாய் மதத்தால் வாழ்வு இழக்கும். |
வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான். |
வாழ்வும் தாழ்வும் சில காலம். |
வாழு, வாழ விடு. |
விண் பொய்த்தால் மண் பொய்க்கும். |
விதி எப்படியோ மதி அப்படி. |
வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா? |
விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா? |
விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? |
வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக. |
விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா? |
விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது. |
விளையும் பயிர் முளையிலே தெரியும். |
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான். |
வீட்டில் எலி வெளியில் புலி. |
வெட்டு ஒன்று துண்டிரண்டு. |
வெறுங்கை முழம் போடுமா? |
வெளுத்ததெல்லாம் பாலல்ல. |
வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும். |